பாலுவின் ஆழ்ந்த மனதின் உணர்வுகள்
புதன், 30 நவம்பர், 2016
ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே !!
அது 1959ம் ஆண்டு. சரவணா பிலிம்ஸ்
ஆகும். அதில் ஒரு பாடல், ( கவிஞர் யார்
தொகையறா :-
மந்தரையின் போதனையால்
வஞ்சக சகுனியின் சேர்க்கையால் !!
சிந்தனையில் இதையெல்லாம்
சரணம் :-
ஒற்றுமையாய்வாழ்வதாலேஉண்டுநன்மையே !!
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் !!இனி
என்ற தலைவர் கலைஞர் அவர்களின் வாக்குக்கு வலு சேர்க்கும் வகையில் அண்ணன்-தம்பி இருவரும் தங்களுக்கு இடையில் இதுவரை இருந்து வந்த, கருத்து பேதங்களை முற்றிலும் மறந்து இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல செயல்பட்டு, திராவிட இயக்கத்துக்கு வலுசேர்க்கும் வகையில், நம்மை அழித்திடத் துடிக்கும் வடமாநில ஆதிக்க சக்திகளை அழித்து. தலைவர் அவர்களின்
திங்கள், 21 நவம்பர், 2016
நல்ல பாம்புக்கும் தண்ணி பாம்புக்கும் என்ன வித்தியாசம் ?
நல்ல பாம்புக்கும் தண்ணி பாம்புக்கும் என்ன வித்தியாசம் ?
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
என்னடா !! இது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்
திருப்பியும் ஆரம்பிச்சுட்டாரா கட்டுரை எழுத,
நம்ம மதுரைக்காரர் TR.பாலு, என்று நீங்க எல்லோரும் ஆச்சரியப்பட்டா, அதுக்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பு கிடையாது.
நான் ஒரு தலைப்பை கையிலே எடுத்துக்கிட்டு
எழுத ஆரம்பிச்சேன் என்றால், அதுலே என்னமோ, ஏதோ ஒரு விஷயம் இருக்கும், என்ற நம்பிக்கை உங்கட்ட இருந்தாத்தான் நான் உசுர கொடுத்து கட்டுரை எழுதுறதுல ஒரு அர்த்தம் இருக்கும். அட...என்ன..நான்..சொல்றது?
சரிதானுங்களே....
சரி. இப்ப விஷயத்துக்கு வருவோம்.
சங்ககால இலக்கிய பாடல் ஒன்று :-
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் !!
அஞ்சாத் தனிவழியே புறம்கிடக்கும் நீர்ப்பாம்பு !!
நெஞ்சில் கரவுடையார் தம்மில் கரப்பர்.--கரவார்
கரவிலா நெஞ்சத்தவர் !!
பொருள் :- தன்னிடம் கொடிய விஷம் இருப்பதால்,நாகப்பாம்பு பொந்துகளிலும், இடுக்குகளிலும்,ஒளிந்து,மறைந்து,வெளியே வராமல், யார் பார்வையிலும் படாமல், இருக்கும். ஆனால் தன்னிடம் எந்தவிதமான விஷமும் இல்லாத காரணத்தால், தண்ணீர் பாம்பு, ஆற்றில்,குளத்தில்,நமதுகால்களுக்குள்ளும், கைகளின் மீதும் தாவி, படர்ந்து வருகிறது. அதுபோல, வஞ்சக எண்ணமும், கெட்ட குணமும், அடுத்தவனை ஏமாற்றி வாழ்பவனும், பிறர் சொத்துக்கு ஆசைப் பட்டு, அதை அபகரிக்க நினைப்பவனும், ஏழைகள் உழைப்பாளிகள், பாட்டாளிகள் உழைப்பை, பணத்தை சுரண்டி தின்பவனும், அவர்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த அவர்களது சொந்தப்பணத்தை, அவர்கள் சொந்த செலவு செய்திட, வங்கியில் இருந்து எடுக்க, அவர்களை பிச்சைக்காரர்கள் போல நடுத்தெருவுக்கு வரவழைத்து, வரிசையில் நிற்க வைப்பவனும், நேருக்கு நேர் வந்து நிற்க மாட்டான்.
பின் குறிப்பு :- மேலே குறிப்பிட்ட இந்தப்பாடலையும் அதன் பொருளையும், இந்தக்கட்டுரையைப் படிக்கும் நேயர்களுள் யாராவது, இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர
மோடி,பாராளுமன்றத்துக்குநேரில்வருகை தராமல், பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்காமல், ஓடி,ஒளிந்துகொண்டு இருக்கும் செயலோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அதற்கு கட்டுரை எழுதிய நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல. அது அவங்க, அவங்க,இஷ்டம் மற்றும் கருத்து சுதந்திரம். அட..என்ன..
நான்..சொல்றது ? சரிதானுங்களே !! அட..ஏங்க..
உங்களைத்தான்..உங்க கிட்டத்தான் பேசுறேன்...
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R.பாலு.
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016
இக்கரைக்கு அக்கரை பச்சை !!
இக்கரைக்கு அக்கரை பச்சை !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அனைவருக்கும் இனிமை நிறைந்த காலை
வணக்கங்கள்.
மனித மனத்தின் (ஆண்கள்) பொதுவான
எண்ணம்,செயல்பாடு எப்படி இருக்கும் ?
என உளவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்
என்று கேட்டால், தங்களிடம் என்ன நிறைவாக
இருந்தாலும், அதன் மதிப்பை உணராமல்,
அடுத்தவர் வைத்திருக்கும் அல்லது அடுத்தவருக்கு சொந்தமான பொருள் மீது தான் ஆசை வரும் என்றே சொல்லி உள்ளனர்.
இந்த இடத்தில் பொருள் என்று குறிப்பிடுவது, அசையும் மற்றும் அசையாத அனைத்து விஷயங்களும் அடக்கம்.
இதையேதான் நமது முன்னோர்கள் எப்படி சொல்லிச் சென்றுள்ளனர் என்றால் :-
இல்லாத பொருள் மீது எல்லார்க்கும்ஆசை வரும் !!
இக்கரைக்கு அக்கரை பச்சை !!
இதில் உதாரணத்திற்கு நான் என்ன சொல்ல
வருகிறேன் என்றால், ஒரு நபர் சைக்கிள்
வைத்திருக்கிறார் என்றால், அவர் மோட்டார்
சைக்கிள் மீது ஆசைப்படுவார். அதே போல
மோட்டார் சைக்கிள் வைத்திருப்போர் சிறிய கார்
மீது ஆசைப்படுவார். சிறிய கார் வைத்திருப்பவர்
பெரிய கார் மீது ஆசைப்படுவார். இது ஒரு
சங்கிலித்தொடர் போல போய்க்கொண்டேதான்
இருக்கும் இதற்குமுடிவில்லை.இதேவரிசையில்
தான்மனிதனுக்குஇறைவன்எந்தத்துணைவியை
முடிச்சு போட்டு வைத்துள்ளானோ அதுதான் அது மட்டும்தான் கிடைக்கும்.
இதையேதான்:-
மனைவி அமைவதெல்லாம் !!
இறைவன் கொடுத்த வரம் !!
என்றுசொன்னார்கள். அதனால்தான். ஒல்லியாக உள்ள துணைவியை உடைய ஒரு ஆண் நன்கு சரீரம் பெரியதாக உள்ள பெண்ணைப்பார்த்து ஏங்குவதும், சரீரம் பெருசாக உள்ள துணைவியை கொண்டவர், ஒல்லியாக
உள்ள பெண்களைப்பார்த்து பெருமூச்சு விடுவதும் வாடிக்கையாக போய்விட்டது. இதுதான் ஆணின் பொதுவான குணம். இருப்பதை தேனாக நினைத்து போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நினைத்து வாழ்வபவர்கள் நம்மில் மிகமிகச்
சிலரே. அடுத்த பொருள் மீது ஆசைப்பட்டால் அவன் நிலைமை என்ன ஆகும் என்பதை ஐம்பெருங்காப்பியங்களுள்ஒன்றான "சிலப்பதிகாரம் " என்ற நூலில் என்ன
எழுதியுள்ளது என்பதை நான் எனதன்பு வாசகர்கட்கு கீழே வழங்கியுள்ளேன். படித்து உணர்க :-
நண்டு சிப்பி வேல்கதலி நாசமுருங்கால்-- தான்
கொண்ட கருவே அழிக்கும் கொள்கையதுபோல்
பண்டு தனம் கல்வி மனம் பாழடையும் நாள் -மனம் பாவையர் மேல் நாடும் என படித்துணர்ந்தும்-நான்
கொண்டவளைத் தான் துறந்து மாதவி சதம் என
நினைத்தேனே !!
பொருள் :- நண்டு, சிப்பி,வாழை மரம் ஆகிய இந்த மூன்றும், தான் அழிந்துபோகும் காலம் எப்போது வரும் என்று நான் தெரிந்திருந்தும் (நண்டு தனது குஞ்சு வயிற்றைக் கிழித்து வரும் போதும், சிப்பி,அதன் வயிற்றைக்கிழித்து கொன்று முத்து எடுக்கப்படுவதும், வாழைமரம் குலை தள்ளியவுடன் அதன் வாழ்வும் முடிந்துவிடும்) மனிதனின் மதிப்பு, பணம்,
கல்வியால் பெற்ற அறிவு, மனம் இவைகள் எப்போது பாழடையும் என்றால் அடுத்த பெண் மீது ஆசைப்படும் போதுதான் என்பதும் நான் தெரிந்திருந்தும் மாதவி என்ற ஆடலரசி மேல் ஆசைப்பட்டு,நான்கொண்டவளை (கண்ணகியைகைவிட்டு வாழ்ந்ததால் அனைத்தும்
இழந்தேன் என்று பாடல் பொருள் மூலம் நாம்
கோவலனின் வரலாறை தெரிந்துகொண்டு மனைவியை மட்டும் நேசித்து வாழ்ந்திட்டால், வாழ்வும் வளம் பெரும்பணம்,நமது செல்வம், மதிப்பு, கவுரவம் இவைகளும் காப்பாற்றப்படும் என்று சொல்லி கட்டுரையை நிறைவு
செய்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
வெள்ளி, 17 ஜூன், 2016
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
உங்கள் அனைவருக்கும் எனது இனிமை
நிறைந்த காலை வணக்கங்கள்.
இன்றைய தினம் நான் எழுதிட எடுத்துள்ள
தலைப்பு நமது இந்தியத் திருநாட்டினில்
ஒவ்வொருநாளும் நடைபெற்றுவருகின்ற
அநியாயங்கள்,அக்கிரமங்கள், ஆகியவற்றின்
மூல காரணமான ஏமாற்றும் வேலையைப்
பற்றியதுதான்.
ஏமாறுபவர்கள் இருக்கின்ற வரையில்,இங்கே
ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்
என்பது முதுமொழி.
அதற்கு ஏற்ப கடந்த தமிழக சட்டமன்றத்
தேர்தலில் மீண்டும் பலவிதமான கோக்கு-
மாக்கு வேலைகள் செய்து மீண்டும் ஆட்சியைப்
பிடித்துள்ள கட்சி, தனது தேர்தல் அறிக்கையில்
(இதுவும் கடைசி நேரத்தில் தி.மு.க.வின் தேர்தல்
அறிக்கையைப் பார்த்து திருடியது) கூறிய
பலவற்றில் ஒன்றிரண்டை மட்டும் ஆட்சிப்
பொறுப்பேற்றபோது கையெழுத்து போட்டு
விட்டு, பெரும்பான்மையான தேர்தல் கால
வாக்குறுதிகளை இன்று காற்றினில் பறக்க
விட்டுள்ள நிலைமையைத்தான் நாம் காண
முடிகின்றது. அதிலும் குறிப்பாகச் சொல்ல
வேண்டும் என்றால், ஆவின் பால் ஒரு லிட்டர்
ரூ.25/= க்கு தருவேன் என்று சொன்னது, ரேஷன்
அட்டை உள்ள ஒவ்வொருவருக்கும் ஸ்மார்ட்
போன், 18 வயதை அடைந்த எல்லா மகளிருக்கும் ஸ்கூட்டி இதுபோல இன்னும் ஏராளமான
வாக்குறுதிகள், ஆளுநர் உரையில் இடம் பெரும்
என வாக்களித்த இளிச்சவாய்த் தமிழர்கள்
எதிர்பார்த்துக்கா த்துக்கொண்டிருந்த நிலையில்
அவர்கள் அனைவருக்கும் நெற்றியில் குழைத்து
நாமம் போட்டதை பார்த்து பகுத்தறிவை பயன்
படுத்தும் அனைத்து நபர்களும் இங்கே சிரித்துக்
கொண்டிருப்பதை நான் பார்க்க முடிகிறது.
அந்தக்காலத்தில் கோவை. பக்ஷிராஜா பிலிம்ஸ்
தயாரித்து முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர்
அவர்கள் எழுதிய சீரிய வசனத்தில் வெளிவந்த
வெற்றிக்காவியம்தான்
"மலைக்கள்ளன்"
என்ற தமிழ்த்திரைப்படம், மறைந்த இசை வேந்தர் S.M. சுப்பையாநாயுடுவின்இன்னிசையில் வெளிவந்த மதுர காவியப்பாடல்தான் இங்கே கட்டுரைக்குத்தலைப்பாகத் தரப்பட்டு உள்ளது அன்பர்களே.
https://www.youtube.com/watch?v=iw3zAZn_iss
மேலே குறித்துள்ள வலைப்பதிவை தனியாக
குறித்து கிளிக் செய்தால் நீங்களும் அந்தப்பாடலை கேட்டு மகிழ்ந்திடலாம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
ஞாயிறு, 8 மே, 2016
ஜெ இந்தத்தேர்தலில் நினைச்சது ஒன்னு !! நடந்தது ஒன்னு !! அதனாலே முழிக்குது அம்மாப்பொண்ணு !!
ஜெ. நினைச்சது நடக்கவில்லை !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் காலை வணக்கங்கள்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அந்தக்காலத்து தமிழ்த்திரைப்படம்
மறைந்த இலட்சிய நடிகர் நடித்து வெளிவந்த
கருப்பு-வெள்ளை படம்தான்
" தை பிறந்தால் வழி பிறக்கும் "
என்ற படம். அதில் மறைந்த கவிஞர் மருதகாசி
எழுதிய பாடல் ஒன்று. இதை கீழ்க்கண்ட குறியீட்டை பதிவு செய்வதன் மூலமாக உங்கள் கைபேசியிலோ அல்லது மடிக்கணினி மூலமாகவோ அந்தப் பாட்டைக்கேட்டு மகிழுங்கள்.
https://www.youtube.com/watch?v=oRR2iaB6miI
பாடலின் முதல் பாரா இதுதான்.
நினைச்சது ஒன்னு !!
நடந்தது ஒன்னு !!-அதனாலே
முழிக்குது அம்மா பொண்ணு !!
கணக்கும் தவறாகிப்போனதனாலே !!
கவலை கொள்ளுதே தனியா நின்னு !!
இந்தப் பாடலுக்கு தற்போதைய உதாரணம்
யார் என்று கேட்டால் அது நிச்சயம் ஜெ தான்.
எப்படி என்றால், நடைபெற உள்ள தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தல் 2016 ல் தான் மட்டுமே
மீண்டும் வெற்றிபெற்று ஆட்சிக்கட்டிலில்
அமர்ந்து மீண்டும் மீண்டும் இந்த தமிழகத்தை
சுரண்டி,கொள்ளையடித்து, தனது தோழியின்
குடும்பத்தை உலக மகா கோடீஸ்வரர்கள்
பட்டியலில் முதலிடத்தை பெற்றிடவேண்டும்
என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் எடுத்த
முயற்சிகளை நான் இரண்டு விதமாக இங்கே
பார்க்கிறேன். அதல் முதலாவது
1) திமுக வின் வாக்கு வங்கிக்கு வேறு எந்த
கட்சியையும் சேர விடாமல், தமிழினத் துரோகி
குடுகுடுப்பைக்காரன் கோபாலு போன்றவர்கள்
மூலம் பல்லாயிரம் கோடிகள் பணத்தைக்
கொடுத்து தனக்கு எதிராக வரும் வாக்குகளை
நாலாபுறமும் சிதறடித்தது ஒரு வகை.
2) இரண்டாவது, தன்னிடம் உள்ள இமயமலை
அளவு பணத்தால், தமிழக ஏழை, பஞ்சை,பராரி
வாக்காளப்பெருமக்களிடம் வாக்கு ஒன்றுக்கு
1,௦௦௦ முதல் 5,௦௦௦ வரை பணத்தை வீசி எறிந்து விட்டால் அந்த ஜனங்கள் மீண்டும் தனக்கே வாக்களிப்பார்கள் என்று நினைத்து, அதனால், தன்னுடன் 2011ம்நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டு சேர்ந்து போட்டியிட்ட அனைத்து வகையான ஜாதிக்கட்சிகளையும் கழட்டி விட்டு, திமிருடன்,ஆணவத்துடன் இந்தத் தேர்தல் களத்தில் அவர் தன்னந்தனி ஆளாக போட்டியிட முடிவு செய்தது.
ஆக, இந்த இரண்டுவகையான முடிவுகள் மூலம்
ஜெ எதிர்பார்த்தது அனைத்து 234 சட்டமன்றத்
தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற ஒன்றே.
அனால், காலதேவன் என்று சொல்லப்பட்ட அந்த
விதி பகவான் வேறு ஒரு முடிவு எடுத்து உள்ளான் என்பது அம்மையாருக்கு அப்போது தெரியாமல் போனதுதான் விதி செய்த சதி.
தமிழக வாக்காளப்பெருமக்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர், எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்பதை அம்மையார் கணிக்கத் தவறிவிட்டார் இதுஅவருக்குமைனஸ்பாயின்ட் 1.
மைனஸ் பாயின்ட் 2 என்ன என்று கேட்டால், இங்கே உள்ள அனைத்து பெண் வாக்காளப் பெருமக்கள் அனைவரும் ஒருசேர, ஓரணியில் திரண்டு விட்டது எந்த விஷயத்திற்கு என்று கேட்டால், மதுவிலக்கு அமல் படுத்தும் கட்சிக்கே தங்களது வாக்கு என்பதே.இதையும் அவர் கவனிக்க, கணிக்க தவறியதும் விதி செய்த சதியே.
தமிழகத்தில் உள்ள குடிப்பழக்கத்திற்கு அடிமையான வாக்காளப் பெருமக்கள், ஜெ யின் கட்சிக்கு வாக்குகளை அளித்திடத் தயாராக இருந்த நிலையில் இவரது படிப்படியாக மதுவிலக்கு அறிவிப்பின் மூலமாக அவர்
அதையும் இழந்து நிற்பதும் விதி செய்த சதியே.
இந்த உலகத்தில் கடைந்து எடுத்த முட்டாள் யார்
என்று கேட்டால், தான் என்ன நினைக்கிறோமோ
அது ஒன்றுதான் சரி என்று நினைப்பவனே என்ற
முதுமொழி இந்த இடத்தில் எனது நினைவுக்கு
வருகின்றது. அதற்கு இலக்கணம் வகுத்து வைத்து செயல் பட்ட அம்மையார் ஜெ உலகின் மிகச் சிறந்த முட்டாள்கள் வரிசையில் முதல் இடத்தில் இங்கே நிற்பதும் விதி செய்த சதியே.
ஆக, அம்மையார் ஜெ நினைத்த எந்தத் திட்டமும்
இங்கே நிறைவேறாதது மட்டும் அல்ல அன்பர்களே.அவர் எதிர்பாராத மற்றொன்று இந்தத் தேர்தலில் நடக்க இருக்கிறது. அதுதான் திமுக தேர்தல் பரப்புரை கூட்டங்களில் கூடுகின்ற மக்கள் பேரலைக் கூட்டம் தலைவர் கலைஞர், தளபதி ஸ்டாலின்,கனிமொழி,
தமிழரசு, செல்வி என அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் மும்முரமாக பணிசெய்ததன் மூலம் திமுக வாக்கு வங்கி மேலும் மேலும் வலு சேர்வதையும் அவர் எதிர்பார்க்கவில்லை.
தேர்தல் ஆணையம், கடந்த பாராளுமன்றத் தேர்தல் 2014ல் செயல்பட்டது போலவே இப்போதும் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதுவும் இல்லாமல் போனது விதி செய்த கடைசி ஆயுதமே.
அன்பர்களே !! இதுபோல அம்மையார் ஜெ திரும்பிய இடமெங்கும் அவரது எண்ணத்திற்கு மண்ணை அள்ளிப்போடும் விதமாகவே அனைத்துவிஷயங்களும்இங்கே நடைபெற்று வருவதை நாம் காண முடிகின்றது.
இறுதியாக, தமிழக தேர்தல் களத்தில், காங்கிரஸ் கட்சியின் அன்னை சோனியாகாந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி இவர்களது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் மேலும் அம்மையாருக்கு பேதியை தந்தது ஒரு சிறப்பு.
தமிழக தேர்தல் முடிவுகள்எனதுமனக்கணக்கில்
கீழ்க்கண்ட விதமாகவே அமைந்து அம்மையார் ஜெ,மக்கள் மன்றத்தால் தண்டிக்கப்படப் போவது என்னவோ உறுதிதான். அதனை அடுத்து அவர் சந்திக்கஉள்ளஅடுத்த தண்டனை,உச்சநீதிமன்றத் தீர்ப்பு. உப்பு தின்றால் தண்ணீர் குடித்துத்தான் தீர வேண்டும். அதுபோல மனசாட்சிக்குத் தெரிந்து தப்பு செய்தால் தண்டனை அனுபவித்துத்தான் தீர வேண்டும். வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இப்படித்தான் இருக்கும்.என்
இருக்க வேண்டும்.
திமுக கூட்டணி அணி = 190
அஇஅதிமுக .................. = 30
இதர கட்சிகள்................ = 14
தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் !!
இறுதியில் தர்மம் வெல்லும் !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
சனி, 23 ஏப்ரல், 2016
" தவ வாழ்வு " வாழ்பவரா ? அம்மையார் ஜெ ?
" தவ வாழ்வு " வாழ்பவரா அம்மையார் ஜெ ?
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் காலை வணக்கம்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
இந்தமாதம் 9ம் தேதி முதல் தன்னுடைய
தேர்தல் பரப்புரையை முதற்கட்டமாக
சென்னைத் தீவுத்திடலில் துவக்கிய நாள்
முதலாக ( பொதுவாக தீவுத்திடலில் இதுவரை
முதல் தேர்தல் பரப்புரையை துவக்கிய
எந்தக்கட்சியும் ஆளும்கட்சியாக ஆனதில்லை)
தான் பங்கேற்கும் ஒவ்வொரு பரப்புரை
கூட்டங்களிலும் ஜெ உணர்ச்சி பூர்வமாக
நடித்து, வாக்காளப் பெருமக்களிடம் என்ன
பேசிவருகிறார் என்றால் :-
உங்களால் நான் !!
உங்களுக்காகவே நான் !!
மக்களால் நான் !!
மக்களுக்காகவே நான் !!
ஒரு " தாய்க்குத்தான் " தெரியும் (?)
தனது பிள்ளைகளுக்கு (?) என்ன தேவை என்று!!
நான் என்னுடைய "தவ வாழ்கையை " உங்கள்
அனைவருக்காகவே வாழ்ந்து வருகிறேன்.
என்னுடைய " தவ வாழ்வு " உங்களுக்காக !!
மக்களுக்காக !!
என்று கீறல் விழுந்த கிராமபோன் இசைத்தட்டு
போல பிதற்றிக்கொண்டு பேசிவருவதைக்கண்டு
எள்ளி நகைத்திடாதவர் எவருமே இல்லை என்றே சொல்லலாம்.
அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்னய்யா சம்பந்தம் இருக்குது ?
என்று மறைந்த எனது தந்தை அடிக்கடி பேச்சில் கேட்பதுண்டு.
அதுபோல ஏக,போக,சுக போக, வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற அம்மையாரின் வாழ்க்கை நடைமுறை என்பதற்கும் " தவ வாழ்விற்கும் " என்ன சம்பந்தம் உள்ளது ? கேட்கிறார்கள் கேள்வி அறிவுள்ளவர்கள்.
ஒரு வேளை உண்பவன் யோகி !!
இருவேளை உண்பவன் போகி !!
மூவேளை உண்பவன் ரோகி !!
நான்குவேளை உண்பவன் இனத்துரோகி !!
என்பதுபோல, கோடீஸ்வரர்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்ற சென்னை: போயஸ் கார்டனில் 10 கிரவுண்டு நிலத்தில், கிட்டத்தட்ட 9.1/2 கிரவுண்டுகளில் ஆடம்பர மாளிகையைக்கட்டிக்கொண்டு அதில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற ஜெயலலிதா "தவவாழ்வு"என்பதைப்பற்றிவாயைத்திறக்கா-வாவது அவருக்கு இங்கே அருகதை உள்ளதா ? என்பதுதான் கற்றோர்கள் கேட்கின்ற கேள்வி.
பல லட்சம்கோடிகள் பணத்தையும் சொத்து
சுகங்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு
(நீதி,நேர்மை,உண்மை,உழைப்பு, இந்த நான்கு
முறைகளில் ஈட்டாமல், லஞ்ச,லாவண்ய,
கொள்ளை, முறைகளில் ஈட்டியது) இவர்
பேசுகிறார், இவரது வாழ்வு" தவ வாழ்வு "என்று.
கேட்கிறவன் கேணையன் என்றால், கேப்பையில் கூட நெய் வடியுமாம் !! என்பார்கள். அதுபோல அல்லவா இருக்கிறது அம்மையாரின் பேச்சும் நடை,உடை,பாவனையும் ?
உனது ஆட்டம் ஒன்னும் இந்தமுறை செல்லாதுடியம்மா !!செல்லாது !!, என்று மறைந்த A.P. நாகராஜன் இயக்கத்தில்
வெளிவந்த " தில்லானா மோகனாம்பாள் "
திரைப்படத்தில்,மறைந்த நடிகை மனோரமாவிடம் மறைந்த நடிகர் E.R. சகாதேவன் சொல்லுவார்.
அதைத்தான் நான் இங்கே மீண்டும் பதிவு
செய்திட விரும்புகிறேன்.
அம்மையார் குன்னக்குடிக்கு அன்னக்காவடி
எடுத்தாலும்கூட இந்தமுறை மக்கள்/வாக்காளப்
பெருமக்கள், மீண்டும் அவரிடம் ஏமாறத் தயார்
இல்லை என்பதை தேர்தல் முடிவுகள்எதிர்வரும்
மே மாதம் 19 ம் தேதி பகல் 1 மணியளவில் இந்த
புளுகு மூட்டை மகாராணியிடம் தெரிவிக்கும்
என்பதில் என்போன்றஅரசியல்ஆர்வலர்களுக்கு
எள்ளின் முனையளவு கூட சந்தேகம் இல்லை...
இல்லவே இல்லை..என்று கூறி கட்டுரையைப்
படித்து சிறப்பித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக்கூறி விடைபெறுகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
சனி, 16 ஏப்ரல், 2016
போடி..போடி..புண்ணாக்கு..போடாதே தப்புக்கணக்கு !!
போடி..போடி..புண்ணாக்கு !!
போடாதே தப்புக்கணக்கு !!
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
எல்லாப்புகழும் இறைவனுக்கே !!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதன்
முதலாக வேட்பாளர்கள் பட்டியலை இங்கே
அறிவித்தவரும், அதுபோலவே தன்னுடைய
தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளின் தேதிவாரி
பட்டியலை தந்தவருமான தமிழக முதல்வர்
அம்மையார் ஜே, இந்தத் தேர்தலில் தனக்கு
என்று ஒரு புதிதான, புதிரான மனக்கணக்கு
ஒன்றினை போட்டுக்கொண்டு, இதுவரை
தன்னுடன் இத்தனை ஆண்டுகளாக தனது
தேர்தல் கூட்டணியில் இடம்பெற்றிருந்த
ஜாதிக்கட்சிகளான மூவேந்தர் முன்னேற்றக்
கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு
நாடு மக்கள் கட்சி, அகில இந்திய பார்வார்டு
பிளாக் (கதிரவன்) கட்சி,மனித நேய மக்கள்
கட்சி போன்ற கட்சிகளை புறந்தள்ளி, அதேபோல்சென்ற 2011ம் ஆண்டு நடந்த சட்டசபைத்தேர்தலில், தன்னுடைய இமாலய வெற்றிக்கு பெரிதும் துணைநின்ற நடிகர் விஜயகாந்த் கட்சியான தேமுதிகமற்றும் இடது,வலது கமிஷன் கட்சிகள் (தயவு
செய்து மன்னிக்கவும்) கம்யூனிஸ்ட் கட்சிகள்,
இவைகளையும் தேவையில்லை என்று ஒதுக்கி
தள்ளிவிட்டு,எனக்குயார்தயவும்தேவையில்லை,
தன்னந்தனியாக தேர்தலை எதிர்கொள்வேன்
வெற்றியும் பெறுவேன் என ஆணவத்துடன் இந்த
தேர்தலில் களம் இறங்கிடக் காரணம்தான் என்ன ?
இதுதான் தமிழக வாக்காளப்பெருமக்கள் அனைவரின் உள்ளத்திலும் எழுந்துள்ள கேள்வி அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அந்தக் காரணம் பற்றியவிளக்கத்தைஉங்கள்அனைவரு-க்கும் தந்திடவே நான் அன்பர்களே, இந்தக் கட்டுரையை இங்கே எழுதிட முன்வந்துள்ளேன் என சொன்னால் அதுதான் உண்மை எனது அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது ஜெயலலிதாஎன்ன சொன்னார் என்பதை நான் இங்கே முதலில் உங்கள் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகின்றேன். அது என்னவென்றால் :-
எனது கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இங்கே எனக்கு எதிரிகள், எதிர்கட்சிகள் என்று யாரையுமே என்னால் பார்த்திட இயலவில்லை.
இதுதான் அவரது கருத்து கடந்த 2014 ம் ஆண்டு
பாராளுமன்றத் தேர்தலின் போது அவரது நிலைப்பாடும்கூட என்றும் நாம் வைத்துக்கொள்ளலாம். சொன்னது
போலவே 39 தொகுதிகளிலும் நின்றார் வென்றார் 37 தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தை தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டு, நூற்றி நாற்பத்தி நான்கு தடை உத்திரவை பிறப்பித்து, தனது லஞ்சலாவன்யத்தில் தான் பெற்ற பல லட்சம் கோடிகள் பணத்தில் சிறிதளவு வாக்காளப் பெருமக்களுக்கு பிச்சை போட்டு வென்றார் . இது வரலாறு.
இதன்பிறகுதான் அன்பர்களே விதியாகப்பட்டது
தனது கொடுமையான கரங்களால் காரியங்கள்
பலவற்றை செய்திடத் தொடங்கியது. அவைகள்
முறையே :-
1) பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி மாண்புமிகு திரு.மைக்கேல் டி.குன்ஹா அவர்களால் " குற்றவாளி " என்று அங்கே தீர்ப்பளிக்கப்பட்டு பரப்பன ஆக்ராஹார சிறையில் அடைக்கப்பட்டது.
2) அதன்பின்பு தமிழக அரசியல் களத்தில் இவரது ஆதிக்கம் கிட்டத்தட்ட அடித்தளம் ஆடிப்போன நிலை மட்டுமே அரசு நிர்வாக நிலையில் எல்லோராலும் மதிப்பிடப்பட்டது. தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்ட
திரு OPS மற்றும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள திரு நத்தம் விஸ்வநாதன் போன்றோர் தங்கள் பதவியை பயன்படுத்தி பல்லாயிரம் கோடிகள்பணத்தை, தலைமைக்கு தெரியாமல் சுருட்டிட ஆரம்பித்ததும் இந்தக்கால கட்டத்தில்தான்.
3) கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் இயற்கையும்
ஜெயலலிதாவுக்குஎதிராகதனதுநிலைப்பாட்டை
மாற்றியதன் விளைவு, சென்னை பெருமழை,
மற்றும் பெருவெள்ளம். இருந்த கொஞ்சநஞ்ச
பெயரையும் இவரது செல்வாக்கையும் நன்றாக குழிதோண்டி மண்ணோடு மண்ணாக புதைத்து விட்டது என்றே சொல்லும் அளவிற்கு வீழ்ந்தது செல்வாக்கு.
4) அடுத்து ஆசிரியர், அரசு ஊழியர் போராட்டம் என வந்ததெல்லாம், இவருக்குத் தலைவலி தருகின்ற விஷயங்களாகவே அமைந்ததும் விதியின் நல்ல விளையாட்டுத்தான்.
ஆக, தனக்கு, தன்னுடைய ஆட்சிக்கு இழிவுதனை மட்டுமே தரக்கூடிய இத்தனை விஷயங்களையும் மறந்து, மறைத்து, இவர் நடைபெற உள்ள தேர்தலில் தன்னந்தனியாக போட்டியிட துணிகிறார் என்று சொன்னால், அதற்கு வேறு என்ன காரணம் இங்கே
இருந்திட முடியும் ?
அது வேறு எதுவும் இல்லை. தன்னிடம் குவிந்துள்ள பல லட்சம் கோடிகள் முறைகேடாக இலஞ்ச லாவண்யநடவடிக்கைகளால் தான் சேர்த்து வைத்துள்ள அந்தப் பணமூட்டைகளில் இருந்து சிறிதளவு பணத்தை இந்த பாழும் ஏழை வாக்காளப் பெருமக்களுக்கு வீசி எறிந்தால் போதும், அவர்கள் அதனைப் பொறுக்கிக்
கொண்டு தனது இரட்டை இல்லை சின்னத்தில் அங்கே வாக்குகளைப் பதிவு செய்து விடுவார்கள் என்கின்ற பேராசை, எகத்தாளம்,ஆணவம், உள்மனக்கணக்கீடு, இதுதான் அவரை
இந்தமுறை தேர்தலில் தனியாக நிற்கவைக்கும்
அளவிற்கு துணிச்சலையும், தைரியத்தையும் இங்கே வாரி இறைத்துத் தந்துள்ளது.
சரி.இதில் இவர் வெற்றி பெறுவாரா ?
நிச்சயமாக படுதோல்வி ஒன்றினை மட்டுமே இவர் சந்திப்பார் என்பது அரசியல் ஆர்வலர்கள் தரும் கணக்கு.
என்ன என்றால், நடப்பது ஒன்றும் பாராளுமன்றத் தேர்தல் அல்ல. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல். இதில் எந்த நிலைப்பாடை தாம் எடுத்திட வேண்டும் என்பதை சாதாரண பாமர மக்களுக்கு
எடுத்துக்கூறிட தேவையில்லை. அதை அவர்கள்
நன்றாக அறிவார்கள். அதன்படி பார்த்தால் கடந்த 2011 தேர்தலில் ஜெயலலிதா பக்கம் இருந்த மிகவும்முக்கியமான ஆதரவு கட்சிகள், நான் மேலே குறிப்பிட்டு இருந்த கட்சிகளான தேமுதிக, வலது,இடது கமிஷன் கட்சிகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, அனைத்து ஜாதிக்கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி இதுபோன்ற எதுவுமே இப்போது அம்மையார் பக்கம் இல்லை. போதாக்குறைக்கு
திரு OPS மற்றும் திரு நத்தம் விஸ்வநாதன், மற்றும்திரு பழனியப்பன் போன்றோரிடம் அம்மையார் நடந்துகொண்ட விதம், (பணம் பறிப்பு போன்றவை)இவைகளால் கட்சி ஓட்டுக்கள் மாறிவிழுகின்ற சூழ்நிலை இவைகளால் இவரால் 25 விழுக்காடுகளுக்கு
மேல் வாக்கு பெற முடியாத நிலைதான் இங்கே
நிலவுகின்றது அன்பர்களே.
ஆனால் இதற்கு மாறாக, திராவிட முன்னேற்றக் கழகம் முன் எப்போதும் இல்லாத வகையில், மிகவும் சுறுசுறுப்பாகதேர்தல் பணியாற்றுவது ஒருபுறம் இருக்க, இவர்களது அணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவும் மக்களின் இயற்கையான ஆதரவும் பன்மடங்கு பெருகி வரும் சூழலில், கடந்த 1971 மற்றும் 1996 ஆண்டுகளில் திமுக
பெற்ற அந்த இமாலய வெற்றிதனைநோக்கியே பீடுநடை போடுகின்றது என்பதுதான் அரசியல் ஆர்வலர்கள் தரும்புள்ளிவிபரங்கள் நிறைந்த கணக்கு.
இவை எல்லாவற்றிற்கும் விடை காண்கின்ற நாள் எதிர்வரும் மே மாதம் 19 பகல் 12 மணியளவில் என்று கூறி, இதுவரை பொறுமையுடன் இந்தக்கட்டுரையை
படித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும்
நன்றிகூறி விடைபெறுகின்றேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)